காணாமல் போனதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்!

காணாமல் போனதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இவர் எப்பாவல பகுதியை சேர்ந்த சிறுவன் என்று தெரிய வந்துள்ளது கண்டுபிடிப்பு சிறுவனை அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நபரும் குழந்தையும் ரிக்கிலகஸ்கட பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.